Sunday, January 24, 2010

திருந‌ங்கையின் வேண்டிக்கோள்..................



வைய‌த்து மாந்த‌ரே ஒரு நிமிட‌ம்! உம் ச‌க‌ ம‌னித‌னின் புல‌ம்ப‌ல்‍‍ கேளீர்
எங்க‌ளுக்கும் க‌ருப்பையில் ப‌த்து மாத‌ம் தான்.....யாமும்
தாயின் மார்பில் அமுதுண்ட‌வ‌ர்தான்....இன்றோ
என் தாயே என்னை த‌ள்ளி வைக்கும் அளவிற்கு த‌ர‌ம‌ற்றா போய்விட்டோம்?
காக்கைக்கும் த‌ன் குஞ்சு பொன் குஞ்சன்றோ?
க‌ட‌வுளின் காட்டுமிராண்டி த‌ன‌த்தால் நாங்க‌ள் ம‌ட்டும் எப்ப‌டி
காக்கை கூட்டில் பிற‌ந்த‌ குயிலானோம்??
தாம் வாழ‌ பிற‌ரை ஏய்க்கும் ம‌னித‌ரே! உம்மை காட்டிலும்
எவ்வ‌ழியில் யாம் சிறுமையுற்றோம்??????
ப‌டைத்த‌வ‌னே! உன‌க்கோர் வேண்டுகோள்.......
ஒரு முறை திருந‌ங்கையாய் பிற‌ந்து வாழ்ந்து விடு.......இல்லை
எம்மையும் பிற‌ரை போல் வாழ‌விடு...................