Friday, April 3, 2009

அனாதை தாய் அகமகிழ்ந்தாள்................

அனாதை தாய் அகமகிழ்ந்தாள் அம்மா எனக்கூறி காலில் விழுந்த அரசியல்வாதியை பார்த்து....

அரசியல்வாதி


ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் சந்திரன் இவன்
தேர்தல் தேதி அறிவித்தவுடன் இவன் வளர்பிறையாய் தோன்றுவான்
வாக்குறுதியெனும் ஒளியை அள்ளி தெளிப்பான்..
குடிசைக்குள் கூட சென்று கெஞ்சுவான்
தேர்தல் அன்று பௌர்ணமியாய் ஜொலிப்பான்.
இவனுக்கு தேய்பிறை மட்டும் இல்லை
தேர்தலுக்கு அடுத்த நாளே அமாவாசைதான்...............