Monday, February 23, 2009

இளையராஜா


இசையின் இமயம் நீ!
ஏழு சுரங்களை கொண்டு ஈரேழு உலகையும் ஆள்பவன் நீ!
இந்திப் பாடல்கள் தமிழகத்தை ஆண்டபோது-உன்
இசையெனும் தென்றல் புரட்சியால்
தமிழகத்தில் தமிழுக்கு அரியாசனம் தந்தவன் நீ!
ஒவ்வொரு காதலர் மனதையும் தாலாட்டுவது
உன் இசையல்லவா?
காதல் தோல்வியில் தோள் கொடுக்கும் தோழன்
உன் இசையல்லவா?

அம்மாஎன்னும் வார்த்தைக்கு அன்பு எனும்

பொருளை மக்கள் மனதில் ஊன்றியவன் நீ!

வயது பேதமின்றி எல்லொரையும் குழந்தையாக்கி

இசையால் தாலாட்டுபவன் நீ!

விருதுகளில் நீ புறக்கணிக்கப் பட்டாய் என்கிறார்கள்!-இல்லை

எல்லோருக்குமான விருது உனக்குமென்றால்

ஏற்குமா? அதை இசை?

மக்கள் மனதை விடவா நீ பெரிய விருதை வாங்கிவிடுவாய்?

அது அன்றும், இன்றும், என்றும், உனக்குத்தானே!

உனக்கு மட்டும் தானே!!

உனக்கு தேவையில்லை 'பாரத ரத்னா'-ஆம்

என்றும் இசையின் எம் 'பாரதத்திற்கு' நீதான் 'ரத்தினம்'



-(மறவை REMI)

காதலா? நட்பா?




புதிதாய் உருவான கருவின் பால் பேதம் போல்
அவள் இதயத்திலும் காதலா? நட்பா? என
என்னால் கண்டறியமுடியவில்லை!!!

-(மறவை REMI)

Sunday, February 22, 2009

கோலம்




காலை-5.30 மணி..........
தாயின் நெற்றி வருடும் கரமென வீசிய குளிர் தென்றல்!
விடுமுறை நாளின் பள்ளிக் குழந்தை போல விளித்தும்
மூடிக்கொண்டு போர்வை துளை வழியாய் சூரியன்!
சில மைல்களுக்கப்பாலிருந்து மிதந்துவரும் யேசுதாசின் பாடல்
போல ராகம் தாளம் தப்பாத குயில்களின் குரல்
முதல் மணி ஒலித்தப்பின் பள்ளி வளாகம் நுழையும்
மாணவர்கள் போல பரபரப்பாக காகங்கள்
இத்தனையும் என் அறிவுக்கு எட்டவில்லை
கோலப்பொடியுடன் வந்த உன் கோலம் கண்டபின்.......

-(மறவை REMI)

Thursday, February 19, 2009

இசை வேந்தன் கே.ஜே.யேசுதாஸ்


தெய்வீகக் குரலோனே! தெய்வத்தாயே!
சபரியில் ஐயப்பனையும், குருவாயூரில்
குருவாயூரப்பனையும் துகிலுறச் செய்வது உன் தாலாட்டுக் குரலல்லவா!!எனவேத் தான் நீ தெய்வத்தாயானாய்!
உன் வறுமையை திறமையுடன் விதைத்து
பெருமையை அறுவடைச் செய்தவன் நீ!!
உன் குரலெனும் மகுடி கொண்டு மக்கள்
மனங்களை தன் வசமாக்கினாய்!
உன்னை சாதிக்கொண்டு சிறையிட்டனர்
நீயோ 'சாதி'த்து அந்த சிறையுடைத்து
பவணி வந்தாய் இந்த அவணி மீது!
ஏழிசை உட்கொண்டு குரல் யாழிசையாய் பொழிகின்றாய்!
இசைக்கிசையாத உயிருமுண்டோ?! -உன்
குரலுக்கு குளிராத இதயமுண்டோ?
இனிய இசைவாழ! நீ வாழியப் பல்லாண்டு!!!!

-(மறவை REMI)


Thursday, February 12, 2009

பாரத நாடு பழம்பெரும் நாடு பண்பு நிறை நாடு

பாரத நாடு பழம்பெரும் நாடு பண்பு நிறை நாடு

பாக்கிஸ்தானில் பத்துப்பேர் இறந்தாலும் பதறித்துடிப்போம்

இலங்கையிலே பத்தாயிரம் பேர் மடிந்தாலும் பதற்றமின்றி

ஆயுதம் விற்போம்-(பாரத...)

போருக்குப்பின் புனர் வாழ்வழிக்குமாம்-ஆம்

தமிழினம் அழிந்தப்பின் கல்லறைகளுக்கு கூரைப் புனையுமாம்-(பாரத...)

சாகக்கிடக்கின்றான் தண்ணீரூற்று என கேட்கின்றோம்-இல்லை இல்லை

செத்தொழியட்டும் பாலூற்றுகிறோம் என்கின்றது -(பாரத...)

உயிர் காக்க ,துயிலின்றி துப்பாக்கி ஏந்துகின்றார்கள்

அதையும் விட்டு விடு -அடிமை

சாசனம் அமைப்போம் வா என்கின்றது....

புலிக்கு புல் வைக்கப் பார்க்கின்றார்கள்..............

-(மறவை REMI)

காதல் கவிதை


சலசலப்பின்றி விழும் கருமை நிற அருவி
என்னவள் கூந்தல்.....
-(மறவை REMI)

காதல் கவிதை


தார் சாலையில் தாமரைப் பூக்களா ?
ஓ! என்னவள் நடக்கிறாளோ?...

-(மறவை REMI)


Tuesday, February 10, 2009

அடே தழிழா! மறத்தமிழா!!



அடே தழிழா மறத்தமிழா - மானம் உன்னில் மருந்திற்கேனுமி(ல்)லையோ?


உன் இனம் இலங்கையிலே பாடை ஏறிக்கொண்டிருக்கிறது-

இந்தியமட்டைப்பந்து அணியோ அங்கு சென்று ஆடை கட்டி ஒய்யாரமாக ஆடிக்கொண்டிருக்கிறது -

நீயும்வேலை வெட்டியை விட்டு ரசிக்கின்றாய்-(அடே தழிழா )

ஒவ்வொரு ஓட்டத்திற்கும் உன் கைகளைத் தட்டிக்கொள்கிறாயே!-தழிழீழ

பசிளம் குழந்தையின் வாட்டம் உன் இதயத்தை தட்டவில்லையா?

இல்லை உனக்கு இதயமே இல்லையா? -(அடே தழிழா )



முத்துக்குமரன் எனும் தியாகச்சிகரத்தின் கருகிய உடலைக்


கண்டுமுன் இதயம் உருகவில்லையா?


உன் இதய நாளங்கள் இறுகவில்லையா?-(அடே தழிழா)


காலையின் உன் எதிர்ப்புக்கண்டு மத்திய ,மாநில அரசுகள் ஆட்டம் காண்கின்றன என்கின்றாய்


மாலையில் அவர்களது மேடையே உன்னால்தான் கூட்டம் காண்கின்றது


அறிவிலாதவனா நீ? எப்போது ஆட்டுமந்தையானாய்? -(அடே தழிழா)


அங்கே துகிலுரிக்கப்படும் மங்கையை காணுகையில் - உன்னுடன்


துகிலெழும்பும் உன் தங்கை நினைவுக்கு வரவில்லையா?


சிதறும் உடல்களை பார்க்கும் போது -உன்னுடன்உணவருந்தும்


உன் பெற்றோர் நினைவுக்கு வரவில்லையா?-(அடே தழிழா)



இருட்டிலிருந்து வெளியே வா! இதய பூட்டுக்களை தகர்த்தெறி!!நாம் மறத்தமிழர் உறவுகளை மறந்த தமிழரில்லை!!!மானம் கொண்டு வானம் தொடலாம் வா!!!!!!!!!!

-(மறவை REMI)

காமராஜர்


விருதுநகர் பெற்ற கல்வி 'விருது' அவன்
கல்விச்சாலைகளின் 'அடிக்கல்' அவன்
பொது வாழ்விலே பிழைகள் இல்லாதவன்
அரசியல் மொழியிலே சொல்லப்போனால் 'பிழைக்கத்தெரியாதவன்'
கல்விக்கண்ணின் 'கருவிழி' அவன் - தனி வழியாயிருந்த
கல்வியை பொது வழியாக்கியவன்
தனக்கென பாரில் ஏதும் 'நாடான்' அவன்
அரசியலுக்கு உண்மைப்பொருள் பொது நலம் என்றால்
தமிழ்நாடு கண்ட 'ஒரே அரசியல்வாதி' அவன்
ஏழை குழந்தைக்கு சத்துணவிட்டு கல்வி
குழந்தையை சீராட்டி வளர்த்தவன்
அந்த ஆறடி உயர பல்கலைக்கழகத்தின் நிறம் கருப்பு
கல்வி அரசே காமராஜா! இந்த உலகில் நீ ஒரு தனிப் பிறப்பு!!
-(மறவை REMI)

அன்னை தெரசா







திருமணமாகாத இந்த கன்னிக்கு

திரும்பிய திசையெல்லாம் குழந்தைகள்

அன்பே கடவுள் என்பதை மக்கள் மனதில் ஆழப்பதித்தவள்

ஜெபத்தையும் தவத்தையும் விட உதவும் கரங்களே

சிறந்தவை என்னும்

புதிய விளக்கம் தந்த பூவுலக விடிவெள்ளி....

-(மறவை REMI)

Monday, February 9, 2009

திருவள்ளுவர்

மூன்றடியில் உலகையளன்தவன் வாமனன்
இரண்டே அடிகளில் உலகையளன்தவன் வள்ளுவன்
நீ எழுத்தாணி கொண்டு மக்கள் மனதை எழுதியவன்
குரலின்றி கூட அமைந்து விடலாம் தமிழ் பேச்சு
உன் குறளின்றி அமைந்திடுமோ!!!!!
-(மறவை REMI)

மகளிர் மட்டும் பேருந்து



கவிதைளை சுமந்து வரும் தகர காகிதம்


அரசு 'மகளிர் மட்டும்' பேருந்து


-(மறவை REMI)

Sunday, February 8, 2009

தமிழ் தாயின் தலை மகன் பாரதி!!!!!


18-ம் நூற்றாண்டில் தோன்றிய 22-ம் நூற்றாண்டு சிந்தனையாளன்.

எட்டயபுரத்தில் பிறந்து எட்டு திக்கும் தமிழமுது பொழிந்த மனித இன மாரி.

எண்ணத்திற்குட்படாத செந்தமிழை கவிதையாக்கி அள்ளி வழங்கிய பாரி.

தன் தலை முடி மீது முன்டாசு கட்டி கொண்டு தமிழன்னையின் மணி முடிமீது வைடூரியங்கள் பதித்தவன்.

அவன் சிந்தனை அணைக்கமுடியாத காட்டுத்தீ!!!

அவன்தான் எங்கள் தமிழ் தாயின் தலை மகன் பாரதி!!!!!
-(மறவை REMI)

முள் பிறப்பு........


பூவாக பிறக்கவில்லையே என வேதனைப்படாதே!

பூவுக்குள்ளும் கொடும் நாகமிருக்கும் !!

முள்ளாயிருப்பதால் வீதியில் வீழாதே! !!வேலியாயிரு

நீ! பூந்தோட்டத்திற்கே காவல் தெய்வமாவாய்....
-(மறவை REMI)

கட்டில்........!!!


ஓடி ஓடி உழைத்தவனை தன் மடியிலிட்டு தூங்க செய்யும் நான்கு கால் தாய்......
-(மறவை REMI)

புத்தன்...ஆசை...!


ஆசையே துன்பத்திற்கு காரணம் என்று ஆசையை துறக்கும் ஆசையில் துறவி ஆனவன்.....!

-(மறவை REMI)

Friday, February 6, 2009

காதல் வேண்டுக்கோள்!!!!!


அன்பே என் தோட்டத்து வழியே நடக்காதே!-உன் பாதம் பட்ட மண்ணில் பயிரிட்டால் பாகற்காய் கூட இனிக்கிறது
-(மறவை REMI)

முதியோர் இல்லம்


ஏறி பயணித்த பின் பயணிகள் ஓடங்களை ஒதுக்குமிடம்
முதியோர் இல்லம்.

-(மறவை REMI)

Wednesday, February 4, 2009

இந்தியா என் தாய் நாடு ????



இந்தியா என் தாய் நாடு என்று என்னால் இப்போது உளமாறு கூறமுடியவில்லை-ஏனெனில்
இழவு வீட்டிற்கு சென்று உளவு பார்க்க மாட்டாள் என் தாய்
-(மறவை REMI)

Monday, February 2, 2009

அந்தி வானமாயிரு!!


சூரியன் கண்டு ஒழியும் விண்மீனாயிராதே!
சூரியனையே வீழ்த்தும் அந்தி வானமாயிரு!!
-(மறவை REMI)