Sunday, January 24, 2010

திருந‌ங்கையின் வேண்டிக்கோள்..................



வைய‌த்து மாந்த‌ரே ஒரு நிமிட‌ம்! உம் ச‌க‌ ம‌னித‌னின் புல‌ம்ப‌ல்‍‍ கேளீர்
எங்க‌ளுக்கும் க‌ருப்பையில் ப‌த்து மாத‌ம் தான்.....யாமும்
தாயின் மார்பில் அமுதுண்ட‌வ‌ர்தான்....இன்றோ
என் தாயே என்னை த‌ள்ளி வைக்கும் அளவிற்கு த‌ர‌ம‌ற்றா போய்விட்டோம்?
காக்கைக்கும் த‌ன் குஞ்சு பொன் குஞ்சன்றோ?
க‌ட‌வுளின் காட்டுமிராண்டி த‌ன‌த்தால் நாங்க‌ள் ம‌ட்டும் எப்ப‌டி
காக்கை கூட்டில் பிற‌ந்த‌ குயிலானோம்??
தாம் வாழ‌ பிற‌ரை ஏய்க்கும் ம‌னித‌ரே! உம்மை காட்டிலும்
எவ்வ‌ழியில் யாம் சிறுமையுற்றோம்??????
ப‌டைத்த‌வ‌னே! உன‌க்கோர் வேண்டுகோள்.......
ஒரு முறை திருந‌ங்கையாய் பிற‌ந்து வாழ்ந்து விடு.......இல்லை
எம்மையும் பிற‌ரை போல் வாழ‌விடு...................

Tuesday, October 27, 2009

திருட்டு க‌ண‌க்கு எழுதிவிட்டான்!!!!

ஆயிர‌ம் பெண்க‌ளை ப‌டைக்க‌ வைத்திருந்த‌ அழ‌கினை கொண்டு‍‍

என்ன‌வ‌ளை ப‌டைத்துவிட்டு இறைவ‌ன்

திருட்டு க‌ண‌க்கு எழுதிவிட்டான்!!!!

Friday, October 16, 2009

இது 'தீபாவ‌ளி' அல்ல‌ "தீவின் வ‌லி"

ம‌ன‌திலும் தீப‌த்தின் ஒளி ப‌ர‌வுவ‌து தான் தீபாவ‌ளி!‍‍‍ - ஆனால்
ஈழ‌ தீவில் க‌ருக்குழ‌ந்தைக்குள்ளும் வ‌லி ப‌ர‌வியுள்ள‌து
என் சொந்த‌ம் அங்கே க‌ருகும் போது
என்னில் எங்க‌ன‌ம் ம‌கிழ்ச்சி பெருகும்?
இது 'தீபாவ‌ளி' அல்ல‌ "தீவின் வ‌லி"

Friday, July 24, 2009

கவிதை கதை !


கூட்டமாய் செல்கின்றனர் பெண்கள் சலசலக்கும் நதிப்போல கலகலப்பாய் பேசியவாறு! நதியிடை ஓர் மின்னல் கீற்று!ஒருத்தி மட்டும் திரும்பி பார்த்தாள்! அந்த பார்வை ஒன்றும் என்னை வதைத்து விடவில்லை, ஆனால் என் மனதில் ஏதோ விதைத்துவிட்டது. அவள் பெயர் அறிவழகி! விதைத்த விதை வளர்ந்து இதயத்தை நெரித்த போதுதான் தெரிந்தது அது காதல் விதை என்று! அவளை நினைக்க வேண்டுமென்று தோன்றவிலை..ஆனால் நினைவெல்லாம் நிறைந்திருந்தாள் பள்ளம் கண்டு பாயும் வெள்ளம் போல!!! அவளை காதலிக்கிறேன் என முடிவு செய்யுமுன் முடிந்துவிட்டது ஓராண்டு.இவ்வோராண்டில் மழையிருந்ததோ அல்லையோ அடிக்கடி மின்னல் மின்னியது.சரி காதலை சொல்ல வேண்டுமே! சொல்லாதக்காதல் விதைக்காத விதையல்லவா?! சொல்லிவிட வேண்டும் எப்படி சொல்வது!!!! வீரத்திற்கு பெயர் சொல்லும் ஊரில் பிறந்த என் மனதில் கடுகளவு கூட தைரியமில்லையா? கன்னியின் கடைக்கண் பார்வை பட்டுவிட்டால் மண்ணில் மாந்தருக்கு மாமலையும் ஓர் மடுவாம் என்றானே பாவேந்தன் !! ஆனால் இங்கே கடைக்கண் பார்வை பட்ட பின்புதானே மாமலையாயிருந்த தைரியம் அரசின் நலத்திட்ட தொகை ஏழை விவசாயின் கையில் கிடைப்பது போல தேய்ந்து அரை விழுக்காடாகிவிட்டது..... இறுதியாய் மறவன் மலைக்கலாமா? என என்னை நானேத் தேற்றிக்கொண்டேன்! அதோ சாலையின் துவக்கத்தில் அவள்!அந்த தார் சாலை அவள் பாதம் பட்டபின் தாமரைப் படர் குளமாய் தோன்றியது!என் அருகில் வந்துவிட்டாள்! நிச்சயம் என்னைவிட தைரியசலிதான். பேச வேண்டுமே ! நான் முதலில் காதலித்த தாய் மொழியாம் தமிழ் மொழி மறந்தே போய் விட்டது! நான் மேடைகளில் கூடப் பேசியிருக்கிறேனே! பேசி பேசியே கொல்கிறான் என எவரேனும் கூறாமல் என் பொழுது அடங்காதே! அது F.M பிரபலமடையாத காலம் இல்லையெனில் என் பெயரை F.M என்றே மாற்றியிருப்பார்கள்! இன்றோ ஒரு வார்த்தை கூட நினைவில் வரவில்லை வாய்க்கும் வார்த்தைக்குமிடையே சீனப்பெருஞ்சுவர்..! இறுதியாக அவளே ஆரம்பித்தாள் "ஏப்படி இருக்கிறீங்க?" என்றாள். செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே! பாரதியின் வார்த்தைகள் நூற்றுக்கு நூறு உண்மை. பதில் சீனப்பெருஞ்சுவரைத் தாண்ட முடியாமல் தவித்தது. தலையை மட்டும் அசைத்தேன் , கடந்து சென்று விட்டாள்.சிறிது தூரம் சென்று திரும்பி பார்த்தாள் மீண்டும் மின்னல் கீற்று! நான் சுயநினைவிற்கு வந்தேன் .
அன்று முழுவதும் என்னுடைய இயலாமையை எண்ணி வருந்தினாலும், அவளது குரல் என் மனதை அலையாய் வருடிக் கொண்டிருந்தது.அவள் என்னை வெறுக்கவில்லை உறுதி! காதலிக்கின்றாளா? உறுதி செய்ய வேண்டுமென உள்ளம் உத்தரவிட்டது.
மீண்டும் ஒரு சந்திப்பு! இன்று எங்களை தவிற உலகில் யாருமேயில்லை என்ற எண்ணம் எனக்கு. சீனச்சுவரை இன்றாவது உடைத்து தமிழுக்கு விடுதலையளிக்க வேண்டும்!
நெருங்கிவிட்டாள்! இன்றும் தமிழின் விடுதலை ஒத்திவைக்கப்பட்டு விட்டது.ஆனால் அவளே பேசினாள்...."உங்களை விரும்புகிறேன்" என்றாள், "என்னை திருமணம் செய்துகொள்வீர்களா?" எனக் கேட்டாள். அவள் வார்த்தைகளே வக்கீலாகி சீனச் சுவருடைத்து என் தமிழை விடுவித்தது. நானும் பேசினேன், ஆனால் வார்த்தைகள் ரேஷனில் வழங்கப்படும் அரிசிப் போல அளவு குறைவாகவே வந்தது.
என் காதலை உறுதி செய்தேன். அவள் முகத்தை இன்றுதான் முழுமையாக பார்த்தேன்!
"நிலவின் மீது நட்சத்திரங்களா?-இல்லை இல்லை
என்னவள் முகத்தில் பரு"
அவள் கண்களை பார்த்தேன்! உலகின் மிகப்பெரிய ஆயுத
உற்பத்தியாளன் இறைவன்தான்! பெண்களின் கண்களுக்கு
மட்டுமே விற்பனைச் செய்துள்ளான்
என் கண்களை தான் பார்வையால் தாக்கினாள்!
காயங்கள் முழுவதும் இதயத்தில்!
அன்று நான் அடைந்த மகிழ்ச்சியை விவரிக்க முடியாது.
இவ்வளவு மகிழ்ச்சியை தந்த இறைவன் சராசரி 65 ஆண்டு
ஆயுள்தானே கொடுத்துள்ளான்! விவரிக்க காலம் போதாது !
எழுத ஆரம்பித்தால் உலகில் காகிதங்கள் மிஞ்சாது!!
காதலர்களாய் கரம் பிடித்து ஒரு நாள் தோட்டத்திலே
நடந்து சென்றுக்கொண்டிருந்தோம்! அவளிடம் "அன்பே ஒரு
வேண்டுகோள் செய்வேன் மறுக்கக் கூடாது"
என்றேன்! "ம்...சரி" என்றாள்.
"தயவு செய்து இனி என் தோட்டத்து வழியே நடக்காதே!-உன்
பாதம் பட்ட மண்ணில் பயிரிட்டால் பாகற்காய் கூட இனிக்கிறது என்றேன்"
வெட்கப்பட்டாள்! ரசித்தேன் ! ஒரு உலக சுற்றுலா சென்று
வந்த திருப்தி ஏற்பட்டது.
தொடர்ந்த காலங்கள் என் பிறவி பயனை அடைந்துவிட்டோம்
எனற திருப்தியை தந்தன.
மக்கள் வாழ்வு சிறப்பது பிடிக்காத அரசியல்வாதி போல
எங்கள் காதல் வாழ்வை காலத்தால் சகித்து கொள்ள
முடியவில்லை!!!!
எங்க‌ள் காத‌லுக்கு குறுக்கே வேலியை வேலை மூல‌ம் த‌யார் செய்த‌து கால‌ம்.ஆம் என‌க்கு சென்னையில் வேலை கிடைத்த‌து.
இற‌ப்பை விட‌ பிரிவு கொடியது என்ப‌தை உண‌ர்ந்து கொண்டேன்.
நாளை புற‌ப்ப‌ட‌ வேண்டும்....
இருவ‌ரும் ச‌ந்தித்தோம்! வார்தைக‌ள் உள்ளிருப்பு போராட்ட‌ம் செய்த‌ன‌| அவ‌ள் க‌ண்க‌ளில் ம‌ட்டும் காட்டாற்று வெள்ள‌ம் க‌ண்ணீராய்!!
என்னால் அணை போட‌ முடிய‌வில்லை..அணைத்துக்கொண்டேன்.!!
அது காட்டாற்றுக்கு குறுக்கே போட‌ப்ப‌ட்ட‌ ஒரு கை ம‌ண‌ல் போல‌ ,பேசாம‌லே விடை பெற்றோம்.
நான் த‌ங்க‌ போகும் என் நண்ப‌னின் வீட்டு விலாச‌ம் ம‌ட்டும் எழுதி கொடுத்தேன்!
நட‌க்கும் போது திரும்பி பார்த்தாள்...இன்று மின்ன‌ல் இல்லை! ஆனால் க‌ண்க‌ளில் ம‌ட்டும் அடை ம‌ழை!..
அந்த‌ வெள்ள‌ம் நிறைந்து என் இத‌ய‌ம் க‌ன‌த்த‌து.
வேலையில் சேர்ந்தேன்.................
முத‌ல் க‌டித‌ம் வ‌ந்த‌து! அவ‌ள் க‌ண்ணீரில் நனைந்து போக‌ எஞ்சிய‌ ப‌குதி மட்டுமே ப‌டிக்க‌ முடிந்த‌து.ஆனால் முளுவ‌தும் புரிந்த‌து...அது அன்பு ம‌ட்டுமே!!!!
த‌பால் கார‌னுக்கு என் வீட்டிற்கும் அலுவ‌ல‌த்திற்கும் நடப்ப‌து ம‌ட்டுமே தின‌ச‌ரி வேலையான‌து.என‌க்கும் அலுவ‌ல‌க‌ வேலையைவிட‌ க‌டிதம் எழுதும் ப‌ணி அதிக‌மான‌து.
கால‌ங்க‌ள் ஓடின‌ காட்டு குதிரையாய்...! காத‌ல் ம‌ட்டும் த‌னியார் வ‌ங்கியில் பெற்ற‌ க‌ட‌னின் வ‌ட்டி போல‌ க‌ட்டுபாட‌ற்று வ‌ள‌ர்ந்த‌து.
தொட‌ர் விடுமுறை என்றால் என‌க்கு திருவிழா! ‍ஆம்
அலுவ‌ல‌க‌த்தில் இருந்து நேர‌டியாக‌ பேருந்து நிலைய‌ம்தான்.
என்னை க‌ண்ட‌தும் அவ‌ள் முக‌த்தில் ஆயிர‌ம் வாட்ஸ் ப‌ல்புக‌ள் ப‌ளிச்சிடும்.அதை ர‌சிக்க‌வே அடிக்க‌டி விடுமுறை வ‌ராதா என‌ ஏங்குவேன்!
அன்று விடுமுறை நாங்க‌ள் இருவ‌ரும் ஐஸ்கிரீம் பார்ல‌ரில் ச‌ந்தித்து கொண்டோம்!சிறிது நேர‌மே பேசினோம்! ஆனால் இல்லை என‌க் கூறி சில‌ ம‌ணிநேர‌ங்க‌ளை க‌ட‌ந்து நின்ற‌து.அவ‌ள் வீட்டிற்கு செல்ல‌ வேண்டும் என‌க்கூறி வேட‌ன் க‌ண்ட‌ மான்போல‌ ப‌த‌றி விடை பெற்றாள்! அவ‌ள் மீத‌ம் வைத்த‌ ஐஸ்கிரீமை சுவைத்தேன்...யார் சொன்ன‌து அமிர்த‌த்தை தேவ‌ர்க‌ள் ம‌ட்டிமே உண்டார்க‌ள் என்று!!!


(தொடரும் .....)

Friday, April 3, 2009

அனாதை தாய் அகமகிழ்ந்தாள்................

அனாதை தாய் அகமகிழ்ந்தாள் அம்மா எனக்கூறி காலில் விழுந்த அரசியல்வாதியை பார்த்து....