Showing posts with label ஈழத்தமிழன். Show all posts
Showing posts with label ஈழத்தமிழன். Show all posts

Thursday, February 12, 2009

பாரத நாடு பழம்பெரும் நாடு பண்பு நிறை நாடு

பாரத நாடு பழம்பெரும் நாடு பண்பு நிறை நாடு

பாக்கிஸ்தானில் பத்துப்பேர் இறந்தாலும் பதறித்துடிப்போம்

இலங்கையிலே பத்தாயிரம் பேர் மடிந்தாலும் பதற்றமின்றி

ஆயுதம் விற்போம்-(பாரத...)

போருக்குப்பின் புனர் வாழ்வழிக்குமாம்-ஆம்

தமிழினம் அழிந்தப்பின் கல்லறைகளுக்கு கூரைப் புனையுமாம்-(பாரத...)

சாகக்கிடக்கின்றான் தண்ணீரூற்று என கேட்கின்றோம்-இல்லை இல்லை

செத்தொழியட்டும் பாலூற்றுகிறோம் என்கின்றது -(பாரத...)

உயிர் காக்க ,துயிலின்றி துப்பாக்கி ஏந்துகின்றார்கள்

அதையும் விட்டு விடு -அடிமை

சாசனம் அமைப்போம் வா என்கின்றது....

புலிக்கு புல் வைக்கப் பார்க்கின்றார்கள்..............

-(மறவை REMI)

Tuesday, February 10, 2009

அடே தழிழா! மறத்தமிழா!!



அடே தழிழா மறத்தமிழா - மானம் உன்னில் மருந்திற்கேனுமி(ல்)லையோ?


உன் இனம் இலங்கையிலே பாடை ஏறிக்கொண்டிருக்கிறது-

இந்தியமட்டைப்பந்து அணியோ அங்கு சென்று ஆடை கட்டி ஒய்யாரமாக ஆடிக்கொண்டிருக்கிறது -

நீயும்வேலை வெட்டியை விட்டு ரசிக்கின்றாய்-(அடே தழிழா )

ஒவ்வொரு ஓட்டத்திற்கும் உன் கைகளைத் தட்டிக்கொள்கிறாயே!-தழிழீழ

பசிளம் குழந்தையின் வாட்டம் உன் இதயத்தை தட்டவில்லையா?

இல்லை உனக்கு இதயமே இல்லையா? -(அடே தழிழா )



முத்துக்குமரன் எனும் தியாகச்சிகரத்தின் கருகிய உடலைக்


கண்டுமுன் இதயம் உருகவில்லையா?


உன் இதய நாளங்கள் இறுகவில்லையா?-(அடே தழிழா)


காலையின் உன் எதிர்ப்புக்கண்டு மத்திய ,மாநில அரசுகள் ஆட்டம் காண்கின்றன என்கின்றாய்


மாலையில் அவர்களது மேடையே உன்னால்தான் கூட்டம் காண்கின்றது


அறிவிலாதவனா நீ? எப்போது ஆட்டுமந்தையானாய்? -(அடே தழிழா)


அங்கே துகிலுரிக்கப்படும் மங்கையை காணுகையில் - உன்னுடன்


துகிலெழும்பும் உன் தங்கை நினைவுக்கு வரவில்லையா?


சிதறும் உடல்களை பார்க்கும் போது -உன்னுடன்உணவருந்தும்


உன் பெற்றோர் நினைவுக்கு வரவில்லையா?-(அடே தழிழா)



இருட்டிலிருந்து வெளியே வா! இதய பூட்டுக்களை தகர்த்தெறி!!நாம் மறத்தமிழர் உறவுகளை மறந்த தமிழரில்லை!!!மானம் கொண்டு வானம் தொடலாம் வா!!!!!!!!!!

-(மறவை REMI)