பாக்கிஸ்தானில் பத்துப்பேர் இறந்தாலும் பதறித்துடிப்போம்
இலங்கையிலே பத்தாயிரம் பேர் மடிந்தாலும் பதற்றமின்றி
ஆயுதம் விற்போம்-(பாரத...)
போருக்குப்பின் புனர் வாழ்வழிக்குமாம்-ஆம்
தமிழினம் அழிந்தப்பின் கல்லறைகளுக்கு கூரைப் புனையுமாம்-(பாரத...)
சாகக்கிடக்கின்றான் தண்ணீரூற்று என கேட்கின்றோம்-இல்லை இல்லை
செத்தொழியட்டும் பாலூற்றுகிறோம் என்கின்றது -(பாரத...)
உயிர் காக்க ,துயிலின்றி துப்பாக்கி ஏந்துகின்றார்கள்
அதையும் விட்டு விடு -அடிமை
சாசனம் அமைப்போம் வா என்கின்றது....
புலிக்கு புல் வைக்கப் பார்க்கின்றார்கள்..............
-(மறவை REMI)
No comments:
Post a Comment