அடே தழிழா மறத்தமிழா - மானம் உன்னில் மருந்திற்கேனுமி(ல்)லையோ?
உன் இனம் இலங்கையிலே பாடை ஏறிக்கொண்டிருக்கிறது-
இந்தியமட்டைப்பந்து அணியோ அங்கு சென்று ஆடை கட்டி ஒய்யாரமாக ஆடிக்கொண்டிருக்கிறது -
நீயும்வேலை வெட்டியை விட்டு ரசிக்கின்றாய்-(அடே தழிழா )
ஒவ்வொரு ஓட்டத்திற்கும் உன் கைகளைத் தட்டிக்கொள்கிறாயே!-தழிழீழ
பசிளம் குழந்தையின் வாட்டம் உன் இதயத்தை தட்டவில்லையா?
இல்லை உனக்கு இதயமே இல்லையா? -(அடே தழிழா )
முத்துக்குமரன் எனும் தியாகச்சிகரத்தின் கருகிய உடலைக்
கண்டுமுன் இதயம் உருகவில்லையா?
உன் இதய நாளங்கள் இறுகவில்லையா?-(அடே தழிழா)
காலையின் உன் எதிர்ப்புக்கண்டு மத்திய ,மாநில அரசுகள் ஆட்டம் காண்கின்றன என்கின்றாய்
மாலையில் அவர்களது மேடையே உன்னால்தான் கூட்டம் காண்கின்றது
அறிவிலாதவனா நீ? எப்போது ஆட்டுமந்தையானாய்? -(அடே தழிழா)
அங்கே துகிலுரிக்கப்படும் மங்கையை காணுகையில் - உன்னுடன்
துகிலெழும்பும் உன் தங்கை நினைவுக்கு வரவில்லையா?
சிதறும் உடல்களை பார்க்கும் போது -உன்னுடன்உணவருந்தும்
உன் பெற்றோர் நினைவுக்கு வரவில்லையா?-(அடே தழிழா)
இருட்டிலிருந்து வெளியே வா! இதய பூட்டுக்களை தகர்த்தெறி!!நாம் மறத்தமிழர் உறவுகளை மறந்த தமிழரில்லை!!!மானம் கொண்டு வானம் தொடலாம் வா!!!!!!!!!!
-(மறவை REMI)
This is correct, i accept this
ReplyDelete