Friday, April 3, 2009

அனாதை தாய் அகமகிழ்ந்தாள்................

அனாதை தாய் அகமகிழ்ந்தாள் அம்மா எனக்கூறி காலில் விழுந்த அரசியல்வாதியை பார்த்து....

அரசியல்வாதி


ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் சந்திரன் இவன்
தேர்தல் தேதி அறிவித்தவுடன் இவன் வளர்பிறையாய் தோன்றுவான்
வாக்குறுதியெனும் ஒளியை அள்ளி தெளிப்பான்..
குடிசைக்குள் கூட சென்று கெஞ்சுவான்
தேர்தல் அன்று பௌர்ணமியாய் ஜொலிப்பான்.
இவனுக்கு தேய்பிறை மட்டும் இல்லை
தேர்தலுக்கு அடுத்த நாளே அமாவாசைதான்...............

Sunday, March 8, 2009

அம்மா பிச்சைக்காரியாய்...............










பெற்ற பிள்ளை அம்மா என அழைக்காத காரணத்தால்




இவள் அனைவரையும் அம்மா என அழைக்கிறாள்...




தெருவோரப் பிச்சைக்காரியாய்...............


-(மறவை REMI)

Thursday, March 5, 2009

பனித்துளி


தந்தை தூங்கிய பின் நுழைவான்

தந்தை விழித்ததும் மறைவான்...

புல்லின் மீது பனித்துளி.....

(தந்தை= சூரியன்)
-(மறவை REMI)

Monday, March 2, 2009

ATM



அடுத்தவன் பணத்தை தன்னகத்தே கொண்டு கம்பீரமாய் காட்சிதரும் பணக்காரன்


மக்கட்தொகை பெருக்கத்தால் சிறுத்துப் போன வங்கியின் உருவம்!!

-(மறவை REMI)