Sunday, March 8, 2009

அம்மா பிச்சைக்காரியாய்...............










பெற்ற பிள்ளை அம்மா என அழைக்காத காரணத்தால்




இவள் அனைவரையும் அம்மா என அழைக்கிறாள்...




தெருவோரப் பிச்சைக்காரியாய்...............


-(மறவை REMI)

Thursday, March 5, 2009

பனித்துளி


தந்தை தூங்கிய பின் நுழைவான்

தந்தை விழித்ததும் மறைவான்...

புல்லின் மீது பனித்துளி.....

(தந்தை= சூரியன்)
-(மறவை REMI)

Monday, March 2, 2009

ATM



அடுத்தவன் பணத்தை தன்னகத்தே கொண்டு கம்பீரமாய் காட்சிதரும் பணக்காரன்


மக்கட்தொகை பெருக்கத்தால் சிறுத்துப் போன வங்கியின் உருவம்!!

-(மறவை REMI)

Monday, February 23, 2009

இளையராஜா


இசையின் இமயம் நீ!
ஏழு சுரங்களை கொண்டு ஈரேழு உலகையும் ஆள்பவன் நீ!
இந்திப் பாடல்கள் தமிழகத்தை ஆண்டபோது-உன்
இசையெனும் தென்றல் புரட்சியால்
தமிழகத்தில் தமிழுக்கு அரியாசனம் தந்தவன் நீ!
ஒவ்வொரு காதலர் மனதையும் தாலாட்டுவது
உன் இசையல்லவா?
காதல் தோல்வியில் தோள் கொடுக்கும் தோழன்
உன் இசையல்லவா?

அம்மாஎன்னும் வார்த்தைக்கு அன்பு எனும்

பொருளை மக்கள் மனதில் ஊன்றியவன் நீ!

வயது பேதமின்றி எல்லொரையும் குழந்தையாக்கி

இசையால் தாலாட்டுபவன் நீ!

விருதுகளில் நீ புறக்கணிக்கப் பட்டாய் என்கிறார்கள்!-இல்லை

எல்லோருக்குமான விருது உனக்குமென்றால்

ஏற்குமா? அதை இசை?

மக்கள் மனதை விடவா நீ பெரிய விருதை வாங்கிவிடுவாய்?

அது அன்றும், இன்றும், என்றும், உனக்குத்தானே!

உனக்கு மட்டும் தானே!!

உனக்கு தேவையில்லை 'பாரத ரத்னா'-ஆம்

என்றும் இசையின் எம் 'பாரதத்திற்கு' நீதான் 'ரத்தினம்'



-(மறவை REMI)

காதலா? நட்பா?




புதிதாய் உருவான கருவின் பால் பேதம் போல்
அவள் இதயத்திலும் காதலா? நட்பா? என
என்னால் கண்டறியமுடியவில்லை!!!

-(மறவை REMI)