Monday, February 23, 2009

இளையராஜா


இசையின் இமயம் நீ!
ஏழு சுரங்களை கொண்டு ஈரேழு உலகையும் ஆள்பவன் நீ!
இந்திப் பாடல்கள் தமிழகத்தை ஆண்டபோது-உன்
இசையெனும் தென்றல் புரட்சியால்
தமிழகத்தில் தமிழுக்கு அரியாசனம் தந்தவன் நீ!
ஒவ்வொரு காதலர் மனதையும் தாலாட்டுவது
உன் இசையல்லவா?
காதல் தோல்வியில் தோள் கொடுக்கும் தோழன்
உன் இசையல்லவா?

அம்மாஎன்னும் வார்த்தைக்கு அன்பு எனும்

பொருளை மக்கள் மனதில் ஊன்றியவன் நீ!

வயது பேதமின்றி எல்லொரையும் குழந்தையாக்கி

இசையால் தாலாட்டுபவன் நீ!

விருதுகளில் நீ புறக்கணிக்கப் பட்டாய் என்கிறார்கள்!-இல்லை

எல்லோருக்குமான விருது உனக்குமென்றால்

ஏற்குமா? அதை இசை?

மக்கள் மனதை விடவா நீ பெரிய விருதை வாங்கிவிடுவாய்?

அது அன்றும், இன்றும், என்றும், உனக்குத்தானே!

உனக்கு மட்டும் தானே!!

உனக்கு தேவையில்லை 'பாரத ரத்னா'-ஆம்

என்றும் இசையின் எம் 'பாரதத்திற்கு' நீதான் 'ரத்தினம்'



-(மறவை REMI)

No comments:

Post a Comment