Monday, February 23, 2009

இளையராஜா


இசையின் இமயம் நீ!
ஏழு சுரங்களை கொண்டு ஈரேழு உலகையும் ஆள்பவன் நீ!
இந்திப் பாடல்கள் தமிழகத்தை ஆண்டபோது-உன்
இசையெனும் தென்றல் புரட்சியால்
தமிழகத்தில் தமிழுக்கு அரியாசனம் தந்தவன் நீ!
ஒவ்வொரு காதலர் மனதையும் தாலாட்டுவது
உன் இசையல்லவா?
காதல் தோல்வியில் தோள் கொடுக்கும் தோழன்
உன் இசையல்லவா?

அம்மாஎன்னும் வார்த்தைக்கு அன்பு எனும்

பொருளை மக்கள் மனதில் ஊன்றியவன் நீ!

வயது பேதமின்றி எல்லொரையும் குழந்தையாக்கி

இசையால் தாலாட்டுபவன் நீ!

விருதுகளில் நீ புறக்கணிக்கப் பட்டாய் என்கிறார்கள்!-இல்லை

எல்லோருக்குமான விருது உனக்குமென்றால்

ஏற்குமா? அதை இசை?

மக்கள் மனதை விடவா நீ பெரிய விருதை வாங்கிவிடுவாய்?

அது அன்றும், இன்றும், என்றும், உனக்குத்தானே!

உனக்கு மட்டும் தானே!!

உனக்கு தேவையில்லை 'பாரத ரத்னா'-ஆம்

என்றும் இசையின் எம் 'பாரதத்திற்கு' நீதான் 'ரத்தினம்'



-(மறவை REMI)

காதலா? நட்பா?




புதிதாய் உருவான கருவின் பால் பேதம் போல்
அவள் இதயத்திலும் காதலா? நட்பா? என
என்னால் கண்டறியமுடியவில்லை!!!

-(மறவை REMI)

Sunday, February 22, 2009

கோலம்




காலை-5.30 மணி..........
தாயின் நெற்றி வருடும் கரமென வீசிய குளிர் தென்றல்!
விடுமுறை நாளின் பள்ளிக் குழந்தை போல விளித்தும்
மூடிக்கொண்டு போர்வை துளை வழியாய் சூரியன்!
சில மைல்களுக்கப்பாலிருந்து மிதந்துவரும் யேசுதாசின் பாடல்
போல ராகம் தாளம் தப்பாத குயில்களின் குரல்
முதல் மணி ஒலித்தப்பின் பள்ளி வளாகம் நுழையும்
மாணவர்கள் போல பரபரப்பாக காகங்கள்
இத்தனையும் என் அறிவுக்கு எட்டவில்லை
கோலப்பொடியுடன் வந்த உன் கோலம் கண்டபின்.......

-(மறவை REMI)

Thursday, February 19, 2009

இசை வேந்தன் கே.ஜே.யேசுதாஸ்


தெய்வீகக் குரலோனே! தெய்வத்தாயே!
சபரியில் ஐயப்பனையும், குருவாயூரில்
குருவாயூரப்பனையும் துகிலுறச் செய்வது உன் தாலாட்டுக் குரலல்லவா!!எனவேத் தான் நீ தெய்வத்தாயானாய்!
உன் வறுமையை திறமையுடன் விதைத்து
பெருமையை அறுவடைச் செய்தவன் நீ!!
உன் குரலெனும் மகுடி கொண்டு மக்கள்
மனங்களை தன் வசமாக்கினாய்!
உன்னை சாதிக்கொண்டு சிறையிட்டனர்
நீயோ 'சாதி'த்து அந்த சிறையுடைத்து
பவணி வந்தாய் இந்த அவணி மீது!
ஏழிசை உட்கொண்டு குரல் யாழிசையாய் பொழிகின்றாய்!
இசைக்கிசையாத உயிருமுண்டோ?! -உன்
குரலுக்கு குளிராத இதயமுண்டோ?
இனிய இசைவாழ! நீ வாழியப் பல்லாண்டு!!!!

-(மறவை REMI)


Thursday, February 12, 2009

பாரத நாடு பழம்பெரும் நாடு பண்பு நிறை நாடு

பாரத நாடு பழம்பெரும் நாடு பண்பு நிறை நாடு

பாக்கிஸ்தானில் பத்துப்பேர் இறந்தாலும் பதறித்துடிப்போம்

இலங்கையிலே பத்தாயிரம் பேர் மடிந்தாலும் பதற்றமின்றி

ஆயுதம் விற்போம்-(பாரத...)

போருக்குப்பின் புனர் வாழ்வழிக்குமாம்-ஆம்

தமிழினம் அழிந்தப்பின் கல்லறைகளுக்கு கூரைப் புனையுமாம்-(பாரத...)

சாகக்கிடக்கின்றான் தண்ணீரூற்று என கேட்கின்றோம்-இல்லை இல்லை

செத்தொழியட்டும் பாலூற்றுகிறோம் என்கின்றது -(பாரத...)

உயிர் காக்க ,துயிலின்றி துப்பாக்கி ஏந்துகின்றார்கள்

அதையும் விட்டு விடு -அடிமை

சாசனம் அமைப்போம் வா என்கின்றது....

புலிக்கு புல் வைக்கப் பார்க்கின்றார்கள்..............

-(மறவை REMI)