Sunday, February 22, 2009

கோலம்




காலை-5.30 மணி..........
தாயின் நெற்றி வருடும் கரமென வீசிய குளிர் தென்றல்!
விடுமுறை நாளின் பள்ளிக் குழந்தை போல விளித்தும்
மூடிக்கொண்டு போர்வை துளை வழியாய் சூரியன்!
சில மைல்களுக்கப்பாலிருந்து மிதந்துவரும் யேசுதாசின் பாடல்
போல ராகம் தாளம் தப்பாத குயில்களின் குரல்
முதல் மணி ஒலித்தப்பின் பள்ளி வளாகம் நுழையும்
மாணவர்கள் போல பரபரப்பாக காகங்கள்
இத்தனையும் என் அறிவுக்கு எட்டவில்லை
கோலப்பொடியுடன் வந்த உன் கோலம் கண்டபின்.......

-(மறவை REMI)

No comments:

Post a Comment