Tuesday, February 10, 2009

காமராஜர்


விருதுநகர் பெற்ற கல்வி 'விருது' அவன்
கல்விச்சாலைகளின் 'அடிக்கல்' அவன்
பொது வாழ்விலே பிழைகள் இல்லாதவன்
அரசியல் மொழியிலே சொல்லப்போனால் 'பிழைக்கத்தெரியாதவன்'
கல்விக்கண்ணின் 'கருவிழி' அவன் - தனி வழியாயிருந்த
கல்வியை பொது வழியாக்கியவன்
தனக்கென பாரில் ஏதும் 'நாடான்' அவன்
அரசியலுக்கு உண்மைப்பொருள் பொது நலம் என்றால்
தமிழ்நாடு கண்ட 'ஒரே அரசியல்வாதி' அவன்
ஏழை குழந்தைக்கு சத்துணவிட்டு கல்வி
குழந்தையை சீராட்டி வளர்த்தவன்
அந்த ஆறடி உயர பல்கலைக்கழகத்தின் நிறம் கருப்பு
கல்வி அரசே காமராஜா! இந்த உலகில் நீ ஒரு தனிப் பிறப்பு!!
-(மறவை REMI)

No comments:

Post a Comment